Monday, October 24, 2011

பயனுள்ள தகவல்கள் - பிற நண்பர்களின் தளங்களில் இருந்து -பாகம் 1(a)

தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்




மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே மரங்களை சார்ந்து தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி இருந்திருக்கிறது. முதலில் மனிதனின் உணவுக்காக மட்டுமே பயன்பட்ட மரங்கள், பின்னர் இருப்பிடத்திற்காகவும், எரிபொருளாகவும் பயன்பட்டது.மனிதனின் தேவைக்கான காடுகள் அதிக அளவில் அழிக்கப்பட்டு விட்டதால் தற்போது மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நமது நாட்டில் தற்போது இருக்கும் கால்நடைகளில் எண்ணிக்கைக்கும், அவற்றுக்கு கிடைக்கும் தீவனத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் பற்றாகுறையானதாக இருக்கிறது.

கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை விளைநிலங்களிலிருந்து பெற முடியாத நிலையில், கணிசமான தீவனத்தை வேளாண் காடுகளிலிருந்து பெற முடியும். குறிப்பாக இப்போது அரசு மக்களுக்கு ஆடு, மாடுகளை வழங்கி வரும் நிலையில் இவற்றுக்கான தீவனமாக, மரங்களை பயன்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க தீவன மரங்களை கிராமங்களில் காலியான நிலங்களில் வளர்த்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். இதனால் தமிழகம் கால்நடை செல்வங்களின் பெருக்கத்தில் முதன் மாநிலமாக மாறும். மக்களின் தேவைக்கேற்ற பால் மற்றும் இதர கால்நடை உற்பத்தி பொருட்கள் எளிதாக கிடைக்கும்.

கால்நடை தீவனமாக பயன்படும் மரங்கள்
கால்நடைகளுக்கு தீவனமாக பல மரங்களும் பயன்படுகின்றன. இப்படி பயன்படும் தீவன மரங்களை பார்க்கலாம்.சவுண்டல், வாகைமரம், வெள்வேல், ஆச்சாமரம், புங்கை மரம் ஆகியவை மிகச்சிறந்த தீவன மரங்களாக இருக்கின்றன. இந்த மரங்களின் தழைகளில் கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து 13 முதல் 30 சதவீதம் வரை இருக்கிறது. சில மரங்களில் சத்துக்குறைவாக இருந்த போதிலும் அவற்றை மற்ற மரத்தழைகளுடன் சேர்த்து அளிக்கும் போது, கால்நடைகளுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்கின்றன.

தீவன மரங்களான சவுண்டல், கருவேல் ஆகியவற்றுக்கு இடையே தீவனப்புல் வகையான கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல் ஆகியவற்றை வளர்க்கும் பட்சத்தில் அவற்றிலிருந்து கிடைக்கும் தீவனத்தைக் கொண்டு 5 பெட்டை மற்றும் 1 தலைச்சேரி இன வெள்ளாடுகளை வளர்க்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தீவன மரங்களை விவசாயிகள் முக்கிய பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களிலும், தரிசுநிலங்களிலும், கண்மாய் கரைகளிலும் வளர்க்கலாம்.

வேளாண் காடுகள்
தீவன மரங்களின் இலைகள் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியதாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் பயன்படுகின்றன. உதாரணமாக, முள்ளுமுருங்கை மரத்தை எடுத்துக் கொள்ளலாம். முள்ளு முருங்கை மரங்களின் இலைகளிலிருந்து தான் மனிதர்களின் சுவாச கோளாறுகளுக்கான முக்கிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான மரங்களை ஆங்காங்கே நடும் போது அது, ஆடு, மாடுகள் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பயன்படும்படி அமைத்துக் கொள்ளலாம். நடப்படும் மரத்தின் இனத்தை பொறுத்து இந்த பயன்பாடு அமையும். பொதுவாக இது போல் தீவன மரங்களை நட்டு வளர்க்கும் இடத்தை வேளாண் காடுகள் என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதனை சில்விபேச்சர் என்கிறார்கள்.

வேளாண் காடுகளின் அமைப்புகள்
வேளாண்காடுகள் என்பது இயற்கையில் மிகப்பெரிய பரப்பளவில் உருவாகியிருக்கும் காடுகள் போல் அல்ல. அது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுவது. இவற்றை கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.

1. விவசாய பயிர்கள் பயிரிடப்படும் இடங்களில் தீவன மரங்களை வளர்த்தல். அதாவது, வயல் ஓரங்கள், குளம், கண்மாய், ஏரிகளின் ஓரங்கள் என்று கிராமங்களில் பொதுவான இடங்கள் உள்பட பயிர் வளர தகுதியான இடங்களில் எல்லாம் தீவன மரங்களை வளர்ப்பது.

2. தீவனப்புல் வகைகள் மற்றும் மேய்ச்சல் தரைகள் அமைந்திருக்கும் இடத்தில் தீவன மரங்களை நட்டு வளர்த்தல். அதாவது, ஒரு விவசாயி கால்நடைகளையே தனது முக்கிய தொழிலாக கொண்டிருந்தால், அவருக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் புல்வகைகள் சிலவற்றை பயிரிடலாம். கூடவே தீவன மரங்களையும் ஒரே இடத்தில் வளர்க்கலாம்.

3. விவசாய பயிர்களுடன் பழ மரங்களை வளர்த்தல். பல்வேறு பழமரங்களின் இலைகள் கூட கால்நடைகளின் தீவனமாக பயன்படும். இதனால், விவசாய பயிர்களுடன் பழமரங்களையும் ஆங்காங்கே நட்டு வளர்க்கலாம்.

4. மரங்கள், பழமரங்கள் ஆகியவற்றுடன் கால்நடைகளுக்கான தீவன புல்வகைகளை வளர்த்தல். அதாவது சில வகையான புற்கள் மரங்களின் அடியில் கூட எளிதாக வளர்ந்துவிடும். இந்த வகையான புற்களை ஏற்கனவே வளர்ந்து நிற்கும் மரங்கள், பழமரங்களுக்கு இடையில் பயிர் செய்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

இப்படியான வழிவகைகளில் தீவன மரங்களையும், தீவன புற்களையும் வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் இலை, தழைகள் கால்நடைகளுக்கு எளிதான உணவாக கிடைக்கும். இதனால் தீவன செலவு பெரிதும் குறைந்து விடும். கால்நடைகளை வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படும். இதனால் கடந்த பல ஆண்டுகளாக ரசாயன உரத்தினால் பாழ்பட்டு தற்போது தனது வளத்தை இழந்திருக்கும் தமிழகத்தின் விளைநிலங்கள் பலவும் மிகவிரைவில் பொலபொலப்பான இயற்கையாகவே சத்துள்ள நிலமாக மாறிவிடும்.

மேற்சொன்ன முறையில் தீவன மரங்களை வளர்க்கும் முறைக்கான ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

அதாவது, சவுக்குமரத்தை ஒரு இடத்தில் பயிரிடும் போது அதே மரங்களின் இடையில் மக்காச்சோளத்தை பயிரிடலாம். இதனால் கால்நடைகளுக்கு தேவையான மக்காச்சோளம் பெரிய அளவில் செலவில்லாமல் ஆண்டு முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். சவுக்கை தனியாக விற்று லாபம் பார்க்கலாம்.

இது போல் வாகை மரத்தின் ஊடே கொழுக்கட்டை புல்லையும், சவுண்டல் மரத்தின் இடையே பி.என்2 புல் வகையையும், சவுக்கு மரத்தின் இடையே மக்காச்சோளம், சோளம், காராமணி போன்ற தீவனப்பயிர்களையும் பயிரிடலாம். இப்படி பயிரிடும் போது ஒரு ஏக்கரிலிருந்து 15.81 டன் அளவுக்கு சோளத்தீவன பயிர் கிடைக்கும்.
இது தவிர அதே ஒரு ஏக்கரில்  வளர்க்கப்படும் சவுண்டல் மரத்திலிருந்து 5.30 டன் அளவுக்கு உலர் தீவனமும், வாகை மரம் எனறால் 6.63 டன் அளவுக்கு உலர் தீவனமும் கிடைக்கும்.

எனவே, தற்போது தமிழகத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பை அதிகரிக்க தீவிரமான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் வேளாண்காடுகளையும் அதிகரித்தால் விவசாயிகள் செலவில்லாமல் அதிக வருமானம் பெறலாம்.தீவன மரங்களை கிராமங்கள் தோறும் நடுவதால், கிராமங்களில் எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று மரங்கள் வளர்ந்து நிற்கும். கிராம மக்களும் தங்களுக்கு தேவையான எரிபொருளுக்காகவும் இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் கிராம மக்கள் சுவாசிக்க சுத்தமான பிராணவாயுவும் இந்த மரங்களிலிருந்து கிடைக்கும். சாணஎரிவாயு கலன் அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம். இப்படி பலபல பலன்களை ஒன்றன் பின் ஒன்றாக செய்து கொண்டே போகலம். ஆகவே, கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் தற்போது வசித்து வரும் இளைஞர்கள் தங்களது கிராம மக்களுக்கு இந்த தகவல்களை கொண்டு சேருங்கள். உங்கள் கிராமமக்கள் பலன் பெறட்டும். சமுதாயம் அமைதியாக முன்னேறட்டும்.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

பயனுள்ள தகவல்கள் - பிற நண்பர்களின் தளங்களில் இருந்து -பாகம் 1

வீட்டிலேயே மூலிகை குடிநீர் தயாரித்து அசத்துங்கள்




பெட்பாட்டில் குடிநீர் கூட உடலுக்கு பாதுகாப்பற்றது என்று தற்போது விஞ்ஞானிகள் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எது தான் நல்ல குடிநீர் என்று குழப்பமாகவே இருக்கிறது. டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் தொடர் கதாநாயகன் தேங்கி கிடக்கும் குளம், குட்டை, ஏரிகளில் இருக்கும் தண்ணீரை கூட சட்டையில் வடிகட்டி குடிப்பதை பார்க்க முடிகிறது. அதே இடத்தில் இருக்கும் தவளை, தேரை, பாம்பு, பல்லிகளை கூட அவர் சாப்பிடுகிறார். நாம் அந்த அளவுக்கு போகவேண்டியதில்லை. வீட்டிலேயே சுவைமிகுந்த மூலிகை குடிநீரை தயாரித்து அருந்த முடியும். இதற்கு பெரிதாக செலவும் இல்லை. இந்த மூலிகை குடிநீரை தயாரிக்க நீங்கள் உருவாக்கும் அமைப்பை பார்த்து உங்களை தேடி வரும் விருந்தினர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லாம் அதிசயித்து போவது உறுதி.

தயாரிக்கலாம் வாங்க....
மூலிகை குடிநீரை தயாரிக்க உங்களுக்கு தேவைப்படுவது எல்லாம், சாதாரண அழகு செடிவளர்க்கும் மண் தொட்டிகள் அல்லது தண்ணீர் நிரப்ப பயன்படும் மண்பானைகள் தான். உங்களுக்கு நாளன்றுக்கு எவ்வளவு மூலிகை குடிநீர் தேவைப்படும் என்பதை பொறுத்து, அதற்கேற்ப தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தொட்டியை வாங்கி வந்த பிறகு இந்த தொட்டிகளின் கீழ்பகுதி முழுக்க கூழாங்கற்களை போடுங்கள். இதற்கடுத்து இந்த கூழாங்கற்களின் மேல் பெருமணலை நிரப்புங்கள். இந்த இரண்டு அடுக்குகளை அடுத்து இதன் மீது மிகச்சிறிய கண்ணுள்ள நைலான் வலையை ( டீ வடிகட்டியில் இருக்கும் வலை) விரித்து விடுங்கள். இப்படி நைலான் வலையை விரிக்கும் போது இந்த அடுக்குக்கு மேல் நாம் நிரப்ப போகும் பொருட்களில் இருந்து வெளியேறும் தூசு, தும்புகள் வடிகட்டப்பட்டு விடும்.

இதற்கடுத்து இந்த நைலான் வலைக்கு மேல் மண், மணல், மக்கிய எரு ஆகியவை கொண்ட எருவை போட்டு மூலிகை செடிகளை நடவு செய்யுங்கள். அதாவது வீட்டில் இஞ்சியை பயன்படுத்துவோம். அளவுக்கு அதிகமாக இஞ்சியை வாங்கி வந்து வீட்டில் வைத்திருக்கும் போது, மீதமுள்ள இஞ்சியை சில அம்மணிகள் மணலில் போட்டு ஈரமாக இருக்கும் படி வைத்திருப்பார்கள். சில நேரங்களில் இந்த இஞ்சி தளிர் விட தொடங்கி விடும். இது தான் மூலிகை செடி தொட்டி எனலாம். இதே போல் மஞ்சள், வசம்பு, தூதுவளை, செம்பருத்தி போன்ற செடிகளை நடவு செய்யலாம். இந்த செடிகளை நட்டவுடன், நடவு செய்யப்பட்ட தொட்டிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் படி செய்ய வேண்டும். அதற்கு இந்த தொட்டிகளில் உள்ள செடிகளுக்கு ஊற்றப்படும் தண்ணீர் எஞ்சி வெளியேறும் போது அது ஒரே இடத்தில் சேகரமாகும் படி ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதாவது, இந்த தொட்டிகள் அனைத்தும் சிமெண்ட்டால் ஆன ஒரு பாத்தியில் வரிசையாக இருக்கும்படி அமைத்துக் கொண்டால் இந்த தொட்டியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஒரு இடத்தில் சேகரமாகும் படி வழிந்தோடும்.

இந்த அமைப்பை உருவாக்கிக் கொண்டபின் முதல் மூன்று நாட்களுக்கு இந்த தொட்டிகளில் இருந்த வெளியேறும் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். காரணம், இதில் ஏராளமான மாசுக்கள் கலந்திருக்கும். பிறகு இதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தலாம். இந்த மூலிகை தொட்டியிலிருந்து கிடைக்கும் தண்ணீரை குளிக்கும் தண்ணீருடன் கலந்து குளிநீராக பயன்படுத்தலாம். இதில் ஒரு விசேடம் என்னவென்றால், உங்களுக்கு எந்த மூலிகை பிடிக்கிறதோ, அந்த மூலிகை செடியை வாங்கி வந்து ஒரு தொட்டியில் நட்டு இந்த அமைப்பில் இணைத்து விடலாம்.

உதாரணமாக கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முடக்கத்தான் என்று சொல்லப்படும் மூலிகை தாரளமாக ரோடுகளின் ஓரத்தில் கூட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ந்து கிடக்கிறது. இந்த மூலிகை செடியை வேருடன் எடுத்து வந்து தொட்டியில் நட்டு அந்த தொட்டி வழியாக வெளியேறும் மூலிகை தண்ணீரை நன்றாக கால் முட்டுகளில் படும்படி குளிக்கலாம். இதனால் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இது போல் பிரண்டை, இஞ்சி போன்ற செடிகளை பயன்படுத்தினால் பித்தம் நீங்கும். குழந்தைகளை நல்ல மூலிகை தண்ணீரில் குளிப்பாட்ட விரும்புபவர்கள் துளசி போன்ற செடிகளை தொட்டிகளில் வளர்த்து அதன் வழியாக வெளியேறும் நீரை குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். தும்பை, நொச்சி செடிகளை சளியால் அவதிப்படுபவர்கள் மூலிகை குடிநீராக, குளியல் நீராக பயன்படுத்தினால் வெகுவிரைவில் சுகமான நிவாரணம் கிடைக்க காணலாம். வீட்டை சுற்றி தோட்டம் போட அதிக அளவு இடம் இருப்பவர்கள் அதிக அளவு மூலிகை செடிகளை வளர்த்து பயன்படுத்தலாம்.

நல்ல கிரியேடிவிடி உள்ள நண்பர்கள் இந்த தொட்டிகளில் இருந்து வெளியேறும் நீரை குளுக்கோஸ் டியூப் போன்ற குழாய் மூலம் அனைத்து தொட்டிகளையும் இணைத்து இதன் வழியாக நீரை பிடித்து பயன்படுத்தலாம். இந்த நீரிலும் நுண்கிருமிகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் நிலக்கரி துண்டு ஒன்றை நீர் சேகரமாகும் கடைசி பாத்திரத்தில் போட்டு வையுங்கள். இந்த நிலக்கரி நீரிலுள்ள நுண்கிருமிகளை எல்லாம் கொன்று விடும்.
பிறகென்ன...காடுமலைகளில் கிடைக்கும் அதே மூலிகை தண்ணீர் உங்கள் வீட்டிலும் அன்றாடம் கிடைக்கும். தளம் :பசுமை இந்தியா

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

Sunday, October 02, 2011

என் கேள்விக்கு என்ன பதில் ???????????????

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்
 
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

Sunday, September 11, 2011

எந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்த நோய் தாக்கும் தெரியுமா --எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலை?

எந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்த நோய் தாக்கும் தெரியுமா --எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலை?

பிறப்பும், இறப்பும் மனிதர்களின் கையில் இல்லை. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட மாதத்தில் பிறக்க வேண்டும் என்பது எவ்வாறு இறைவனால் நிச்சயிக்கப்பட்டதோ அதேபோல ஒருவரின் இறப்பும் முதலிலேயே நிர்ணயம் செய்யப்பட்டதுதான்.
ஒருவரின் பிறந்த மாதத்திற்கும் அவர்களுக்கு தோன்றும் நோய்கள், வகிக்கும் பதவிகளுக்கும் தொடர்பிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒருவர் பிறந்த மாதத்திற்கும் அவரை தாக்கும் நோய்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தென்மேற்கு முசௌரி மாநில பல்கலைக்கழகமும், ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.
கற்றல் குறைபாடு
ஜனவரியில் பிறந்தவர்களுக்கு அல்சீமர் நோய் தாக்குதல் அதிகம் இருந்தது தெரியவந்தது. பிப்ரவரியில் பிறந்தவர்களுக்கு பிபோலர் டிசாடர் நோயும், மார்ச் மாதத்தில் பிறந்தவர்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும், ஆட்டிசம் தாக்குதலும் இருந்தது கண்டறியப்பட்டது.
ஏப்ரல், மே மாதங்களில் பிறந்தவர்களுக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு நோய் தாக்குதல் அதிகம் காணப்பட்டது.
நுரையீரல் நோய்கள்
ஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் பிறந்தவர்களுக்கு நீரிழிவு, பர்க்கின்சன் எனப்படும் நோய்கள் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிறந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர் தோல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்
இந்த ஆய்வு முடிவினை மருத்துவ உலகத்தினரும் உண்மை என்று ஒத்துக்கொண்டிருக்கின்றனர். சீசனைப் பொருத்தே நோய்கள் தோன்றுவதால் ஒருவர் பிறக்கும் மாதத்திற்கும் அவர்களுக்கு வரும் நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


தொழிலுக்கும் பிறப்புக்கும் தொடர்பு
அதேபோல குழந்தைகள் பிறக்கும் மாதத்திற்கும், எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலைக்கும் தொடர்பு இருப்பதாக லண்டன் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த முறை நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப்பு அறிக்கையினை பயன்படுத்தி அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் ஜனவரியில் பிறந்தவர்கள் ஆட்சியராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடிகர்களாகவும் உள்ளதாக தெரியவந்தது.
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும் இருக்கின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின் அடிப்படையில் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி புரிவதாக கண்டறிந்துள்ளனர்.
அமாவாசையில் பிறப்பது யோகம்
அமாவாசை திதியில் பிறப்பவர்கள் யோகம் நிறைந்தவர்கள் என்று சோதிடவியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையைப் பொருத்து அவர்களின் குணநலன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்களாகவும், வைகாசியில் பிறந்தவர்கள் பொய்கூறுபவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும், ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்.
நாடாளும் ராஜதந்திரிகள்
ஆவணி மாத அமாவாசையில் பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்களாகவும், புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்களாகவும், ஐப்பசியில் பிறந்திருந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.
கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்களாகவும், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்களாகவும், மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்று நாற்பது வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.
தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகவும், பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள் என்றும் அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை சோதிட ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்க எப்ப பிறந்தீங்க,எப்படி இருக்கீங்க..?

THANKS:vanakkamnet


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

Thursday, September 01, 2011

குடமிளகாய் -அசத்தல் சமையல்

குடமிளகாய் பொடி புலாவ்
தேவையான பொருட்கள்
குடமிளகாய்-1
வெங்காயம்-1
காரட்-1
பட்டாணி-1 கப்
கடலைப்பருப்பு-1/2 கப்
வெள்ளை உளுத்தம்பருப்பு-1/4கப்
மிளகாய் வற்றல்-8
காயம்-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
கறிவேப்பிலை-1 இணுக்கு
சாதம்-தேவையான அளவு
செய்முறை
1.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்யவும்.
2.அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3.நறுக்கிய குடமிளகாய்,காரட்,பட்டாணி சேர்த்து உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் மூடி வைத்து வேக விடவும்.அவ்வப்போது கிளறி விடவும்.
4.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல், காயம் சேர்த்து வதக்கவும்.
5.பருப்புகள் ஆறியவுடன் மிக்ஸியில் கரகரப்பாகத் திரித்து எடுத்து வெந்த காய்கறிகளுடன் சேர்க்கவும்.
6.சாதத்தை உதிர் உதிராக வேக வைத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆற விட வேண்டும்.
7.காய்கறிக்கலவை ஆறியவுடன், சாதத்துடன் சேர்த்துக் கலக்க குடமிளகாய் மிளகாய்பொடி புலாவ் தயார்.
கூடுதல் குறிப்புகள்
1.மிகவும் ருசியான இந்தப் புலாவ் விரைவில் தயார் செய்யலாம்.
2.பருப்புகளை வறுத்துத் திரிப்பதற்குப் பதில் மிளகாய்ப்பொடியையே காய்கறிக்கலவையுடன் சேர்த்து செய்யலாம்.
3.திரித்த பருப்புகளை முழுவதுமாக சாதத்துடன் கலக்காமல் காரத்திற்கு ஏற்ப சிறிது சிறிதாகக் கலக்கலாம்.



குடமிளகாய் தால் தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு-1 கப்
குடமிளகாய்-1
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
சீரகம்-1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய்-4
நெய்-1 டீஸ்பூன்
செய்முறை:
1.குக்கரில் பாசிப்பருப்பைக் குழைய வேக விடவும்.
2.காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3.வாணலியில் நெய் விட்டு சீரகம்,பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும்,பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும்.
4.பொடியாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயைச் சேர்த்து வதக்கவும். உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
5.வெந்த பாசிப்பருப்பை வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து எலுமிச்சை பிழிந்து இறக்கி வைக்கவும்.
6.தாலில் அலம்பிய கொத்தமல்லித் தழையைத் தூவவும்.
கூடுதல் குறிப்புகள்
1.பத்தே நிமிடங்களில் தயார் செய்யக்கூடிய எளிய தால் சப்பாத்தி,பூரி வகையறாக்களுக்குச் சிறந்த இணை.
2.பாசிப்பருப்பிற்குப் பதில் துவரம்பருப்பு சேர்த்தும் இந்த தால் செய்ய வித்தியாசமான ருசி கிடைக்கும்.
3.பச்சைமிளகாய் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
4.எலுமிச்சையை முதலிலேயே பிழியக் கூடாது, தாலை இறக்கி வைக்கும் போது தான் பிழிந்து விட வேண்டும்.


குடமிளகாய் கொத்ஸ¤
தேவையான பொருட்கள்
குடமிளகாய்-1
வெங்காயம்-1
நாட்டுத்தக்காளி-1
காயம்-சிறிதளவு
எண்ணெய்-1 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு-1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 இணுக்கு
சாம்பார்பொடி-1 டீஸ்பூன்
கொத்தமல்லி-தேவையான அளவு
செய்முறை
1.காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொள்ளவும்.
3.வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
4.தக்காளி,குடமிளகாயை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து உப்பு,சாம்பார்பொடி,காயம் சேர்த்து மூடிக் கொள்ளவும்.அவ்வபோது கிளறி விடவும்.
5.காய்கறிகள் வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.
கூடுதல் குறிப்புகள்
1.கொத்ஸ¤வில் காரம் அதிகமாகி விட்டால் கொத்ஸ¤வை இறக்கும் போது எலுமிச்சை பிழிந்து விடலாம். இல்லையென்றால் வெல்லம் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கக் காரம் மட்டுப்படும்.
2.பூண்டு சேர்க்க விரும்புபவர்கள் வெங்காயத்தை வதக்கும் போது அரைப் பல்லு சேர்த்துக் கொள்ளலாம்.
3.சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை போன்ற சிற்றுண்டிகளுக்குச் சிறந்த துணை இந்தக் குடமிளகாய் கொத்ஸ¤.
4.சாம்பார் வெங்காயம் மற்றும் நாட்டுத்தக்காளியில் குடமிளகாய் கொத்ஸ¤ செய்ய சுவை அதிகரிக்கும்.
5.புளிப்புச்சுவை வேண்டுவோர் புளிநீரைக் கெட்டியாகக் கரைத்து காய்கறிகளுடன் சேர்த்துக் கொதிக்க வைக்க சுவையான புளிப்புக்குடமிளகாய்கொத்ஸ¤ தயார்.


குடமிளகாய் ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-1
குடமிளகாய்-1
பச்சைமிளகாய்-2
இட்லிமாவு-தேவையான அளவு
செய்முறை
1.காய்கறிகளையும் பச்சைமிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.தோசைக்கல்லில் இட்லிமாவை வட்டமாக ஊற்றி உடனேயே வெங்காயத்தையும் குடமிளகாயையும் மாவைச் சுற்றிலும் தூவ வேண்டும்.
3.பிறகு தக்காளி,பச்சைமிளகாயைப் போடவும்.
4.ஊத்தப்பத்தைச் சுற்றி எண்ணெய் விடவும்.
5.வெந்தவுடன் ஊத்தப்பத்தைத் திருப்பிப் போட்டு வேக விடவும்.
கூடுதல் குறிப்புகள்
1.வெறும் தோசையாக உண்ணாமல் காய்கறிகள் சேர்த்து ஊத்தப்பம் செய்து உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
2.மாவு கொஞ்சமாக இருந்தால் காய்கறி ஊத்தப்பம் செய்து உண்டால் உண்ட திருப்தியும் கிடைக்கும்.
3.மாவைத் தோசைக்கல்லில் ஊற்றி காய்கறிகள் போட்ட பிறகு தோசைமிளகாய்ப்பொடியை மாவைச் சுற்றிலும் தூவி வேகவைக்க பொடிவெஜிடபிள்ஊத்தப்பம் தயார். மிளகாய்ப்பொடி சேர்க்க விரும்பினால் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவையில்லை.
4.சுவையான ஊத்தப்பத்திற்குச் சட்னியோ,சாம்பாரோ தேவையில்லை. வெறுமனே உண்ணவே நன்றாக இருக்கும், ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் சூடாக இருக்கும் போதே இந்த ஊத்தப்பத்தை உண்ண வேண்டும். ஆறினால் நன்றாக இருக்காது.


டிப்ஸ்:
1.சமைத்தக் காய்கறிகளைத் தினமும் இரண்டு வேளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.உணவகங்களில் பச்சைக் காய்கறிகளையோ தயிர்சாதத்தையோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்(உணவகங்களில் தயிர்சாதத்திற்குப் பயன்படுத்தும் சாதம் மிகவும் பழைய சாதம் என்பதால் தயிர்சாதம் மட்டும் உணவகங்களில் உண்ணக் கூடாது)
3.பூண்டைத் தண்ணீரில் மூழ்க வைத்து பத்து நிமிடங்கள் கழித்து உரிக்க சுலபமாக வரும்.
4.வெங்காயம் வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வதக்க சீக்கிரம் வதங்கும்.
5.காய்கறிகளை மூடி வைத்துச் சமைக்க சீக்கிரம் வேகும்.நேரமும் மிச்சமாகும்.
6.உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.குடமிளகாயில் கொழுப்புச்சத்து,கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
7.குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
8.கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
9.குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.
10.குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு  பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

காக்கை சனி பகவானின் வாகனமா? ஏன்?.... ஜோதிடத்தில் சனி பகவானை ஆயுள் காரகன் என்று கூறுகிறார்கள்...ஏன்?.. எள் எண்ணெயால் தீபம் ஏற்றுவது ஏன்?...


கண்ணுக்கு தெரியும் கிரகங்களில்(இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் பார்க்கலாம்) மிக மெதுவாகவும் ஒரு சுற்று வர நீண்ட காலம் அதாவது 30 வருடங்கள் எடுத்துக்கொள்ளும்...
மேலும் இவருக்கு உகந்த தானியம் எள்ளு ஆகும்....எள் உட்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன் ஆயுளும் கூடும் ஆனாள் பசு நெய் உட்கொண்டால் நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்...

மேலும் காகம் ஆயுள் காரகனான சனி பகவானின் வாகனம் என்கிறார்கள் ...
அந்த காலங்களில் நாம் உண்ணும உணவு சுகாதாரமாக, விஷம் கலக்காமல் உள்ளதா என கண்டுபிடிக்கும் சாதனம் எதுவும் இல்லை...
உறவுகளும் நட்புகளும் கலந்து கொள்ளும் விழாக்களில் விழா நடத்துபவர்களுக்கு வேண்டாதவர்கள் விஷம் கலந்து வைத்தால் கண்டு பிடிக்க முடியாமல் வம்சமே அழிந்து விடும்....இதற்காக முன்னோர்கள் ஏற்படுத்திய விஞ்ஞானபூர்வமான ஏற்பாடே காகத்திற்கு உணவு வைப்பது...
இருக்கும் உயிரினங்களில் தன் இனத்தை அழைத்து உணவருந்துவது காகம் மட்டுமே அவ்வாறு அழைக்கும் காகம் அந்த உணவை தான் மட்டுமே உண்ணும....மற்ற காகங்கள் உண்ணாது...இவ்வாறு உண்ட காகம் மூன்று நிமிடங்களுக்கு மேற்பட்டு உயிருடன் இருந்தால் மற்ற காகங்களும் உண்ணும....விஷம் கலந்திருந்தால் அந்த உணவுண்ட முதல் காகம் மூன்று நிமிடங்களுக்குள் இறந்து விடும் 
ஆக காகத்திற்கு உணவிட்டு அந்த காகம் உயிருடன் இருந்தால் விழா நடத்தும் மனிதர்களும் உணவருந்தலாம்
மனிதர்களின் உயிருக்கு ஆபத்தில்லாமல் ஆயுள் காப்பதால் காகத்தை ஆயுள் காரகனின் வாகனம் என்கிறார்கள்...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

Thursday, August 04, 2011

சுயதொழில் : நீங்களும் முன்னேறலாம்-இயற்கை மீன் வளர்ப்பு!

இணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு!

செழிப்பான நீர்வளம் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக இருப்பது மீன் வளர்ப்பு. வழக்கமாக பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையும், அதிகளவிலான அடர்தீவனங்களையும் பயன்படுத்திதான் மீன்களை வளர்க்கிறார்கள். அவர்களுக்கிடையில் கொஞ்சம் வித்தியாசமாக அடர்தீவனத்தைக் குறைத்து, அதிகளவில் பசுந்தீவனங்களை மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமாக மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் ஆபிஸீல வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து்கிட்டே இடையில் கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பயி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிவிட்டேன். மூணு ஏக்கர்ல், 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஓதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். மீதி இடத்துல் வழக்கம்போல நெல்சாகுபடி நடக்கிறது.

நானும் ரசாயன விவசாயந்தான செய்துக்கிட்டிருந்தேன். ரசாயன உரத்தால வர்ற தீமைகளை அடிக்கடி கெள்விப்படுறப்போ எனக்குள்ள ஒரு உறுத்தல் வந்தது. அதனால, இயற்கைக்கு மாறனும்னு பயிற்சிகளில் கலந்துக்கிட்டேன். விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல பசுமை விகடனும் அறிமுகமாகவே, முழுசா இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிட்டேன். மீன் வளர்ப்புத் துறையில இருக்கற பெரும்பாலான விஞ்ஞானிகள், உரம் போட்டுத்தான் மீன் வளர்க்கச் சொல்றாங்க, விவசாயத்துலயே ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கணும்னு பேசிக்கிட்டிருக்கறப்போ, ‘மீன் வளர்க்கறதுக்குப் போய் ரசாயனத்தைப் பயன்படுத்தணுமா?னு ஒரு கேள்வி எனக்குள்ள உருவாகியது. குளத்துக்கு அடியில் இருக்குற மீனுக்கானத் தீவனத் தாவரங்கள் வேகமா வளர்றதுக்குத்தான் ரசாயன உரம் பயன்படுத்தறாங்க. ஆனா, அதோட தாக்கம் தண்ணீர் மூலமாக கட்டாயம் கொஞ்ச அளவுக்காவது மீன் உடம்புக்குள்ளேயும் இருக்கத்தான் செய்யும். அதனால உற்பத்திச் செலவு அதிகரிக்கிறதோட மீனோட சுவையும் குறைந்துவிடும். எனக்கு இதில் ஒப்புதல் இல்லாததால  இலை, தழைகளைக் கொடுத்தே மீன் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இயற்கையாவே ஆறு, குளத்துலயெல்லாம் வளர்ற மீன்களுக்கு யாரும் உரம் போடுறதில்லையே.

வீட்டு ஓரங்கள்ல தோட்டக்கால் வேலிகளில் முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்கள வளர்த்து, அதையே வளர்ப்பு மீன்களுக்கு உணவா கொடுக்கலாமேனு யோசித்து அதையே நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். குளத்துக்குள்ள நுண்ணுயிர்கள், பாசி வளர்றதுக்கு சாணம் மாதிரியான இயற்கைக் கழிவுகளையும் கொடுக்குறேன். இப்படி வளர்த்தாலே ஆறே மாதத்தில் மீன் ஒவ்வொண்ணும் ஒரு கிலோ எடைக்கு வந்துவிடுகிறது. சுவையாவும் இருக்கு. அப்பறம் எதுக்குத் தேவையில்லாம ரசாயனத்தைப் பயன்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியவர், 33 சென்ட் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பதற்கானத் தொழில்நுட்பத் தகவல்களை, அழகாக விளக்குகிறார்.


35 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழம் இருக்குமாறு குளம் வெட்டிக் கொள்ள வேண்டும் (விவசாயத் தேவைக்கான நீராதாரத்தைப் பெருக்குவதற்காக, அரசு செலவில் பண்ணைக் குட்டை அமைத்துத் தரும் திட்டத்தை வேளாண்துறை நடை முறைப்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீன் வளர்ப்பையும் மேற் கொள்ளலாம்). அதில் தண்ணீரை நிரப்பி, குறிப்பிட்ட அளவுக்கான நீர், தொடர்ந்து தேங்கி நிற்கிறதா என்பதை உறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிகமாக தண்ணீர் உறிஞ்சக்கூடிய பகுதியாக இருந்தால், குளத்தின்  அடியில் கரம்பை மண்ணைப் பரப்பி, தண்ணீரைத் தேக்கலாம். ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் அருகில் இருக்கும் பகுதியாக இருந்தால், கவலையேபடத் தேவையில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கும்.

பண்ணைக் குட்டையில் மூன்றடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிரப்பி, இரண்டு மாட்டு வண்டி அளவுக்கு கட்டி இல்லாத ஈர சாணத்தை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரத்திலேயே சாணத்தில் இருந்து நுண்ணுயிர்கள் பெருகி விடும்.பிறகு அருகில் உள்ள மீன் விதைப் பண்ணைகளில் இருந்து, இரண்டு மாத வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடவேண்டும். மீன்கள், அவை வளர்க்கப்படும் பகுதியைப் பொறுத்து மூன்று வகைகளாக அழைக்கப்படுகின்றன. அடி மீன் (சி.சி. காமன் கார்ப், மிர்கால்), நடுத்தட்டு மீன் (ரோகு, கெண்டை), மேல் மீன் (கட்லா, சில்வர்) எனப்படும் இந்த மூன்று வகைகளையும் கலந்து வளர்க்கும் போது குளத்துக்குள் இட நெருக்கடி இல்லாமல் மீன்கள் வளரும். பொதுவாக அனைத்து வகை மீன் குஞ்சுகளும் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. வளர்ந்த மீன்களை மொத்தமாக விற்கும் போதும் சராசரியாக விலை நிர்ணயித்துதான் வியாபாரிகள் வாங்கவார்கள். அதனால் பல ரகங்களைக் கலந்து வளர்க்கும் போது விற்பனையில் பிரச்சனை இருக்காது. ஒரு வேளை நேரடி விற்பனை செய்வதாக இருந்தால், நமது பகுதி சந்தை நிலவரத்துக்கேற்ற அளவுக்கு ஒவ்வொரு ரக மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 33 சென்ட் அளவு குளத்துக்கு 1,200 குஞ்சுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளை விட்ட பிறகு நீர்மட்டத்தை நான்கடிக்கு உயர்த்தி, எப்போதும் அதே தண்ணீர் மட்டம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

குஞ்சுகளை விட்டதில் இருந்து இரண்டு நாளைக்கு ஒருமுறை தொடர்ந்து 25 கிலோ அளவுக்கு பசுஞ்சாணத்தைக் குளத்தில் கலந்து விடவேண்டும். ஒரு மாத காலம் வரை தினமும் 5 கிலோ அரிசித் தவிடு, ஒரு கிலோ தேங்காய் பிண்ணாக்கு, ஒரு கிலோ அரிசியில் வடித்த சாதம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மூன்று பங்காகப் பிரித்து சிறிய ஓட்டைகள் உள்ள சாக்கில் இட்டு, மூன்று இடங்களில் தண்ணீரின் மேல்மட்டத்தில் மூழ்குமாறு வைக்க வேண்டும். வழக்கமாக கடலைப் பிண்ணாக்கைத்தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். அதைவிட குறைவான விலையில் கிடைக்கும் தேங்காய்ப் பிண்ணாக்கிலும் அதற்கு ஈடான புரதச்சத்து இருப்பதால், தீவனச்செலவு கணிசமாகக் குறையும். தவிர, தேங்காய் வாசனைக்கு மீன்கள் போட்டிப் போட்டு வந்து சாப்பிடும். இரண்டாவது மாதத்திலிருந்து அரிசித் தவிடை மட்டும் மூன்று கிலோ கூட்டிக் கொள்ள வேண்டும்.

 

இந்த தீவனங்கள் மட்டுமில்லாமல் தினமும் 5கிலோ அளவுக்கு முருங்கை, அகத்தி, சூபாபுல், புல்வகைகள் என பசுந்தீவனங்களையும் கலந்து குளத்தில் இட வேண்டும். துளசி, சிறியாநங்கை  போன்ற மூலிகைகளையும் கலந்து இடலாம். நாம் இடும் பசுந்தீவனத்தில் எந்த வகையான இலைகளை மீன்கள் உண்ணாமல் கழிக்கிறதோ அந்த வகைகளை இடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும். அதே போல முதல் நாளே அதிகளவில் பசுந்தீவனத்தைக் கொட்டி விடாமல், கொஞ்சமாகக் கொட்டி மீன்கள் சாப்பிடும் அளவுக்கேற்ப அதிகரிக்க வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டால், அதிக எடை கூடுமே தவிர, வேறு தவறான விளைவுகள் எதுவும் வராது. தவிர, எந்த வகையான உயிரினமாக இருந்தாலும், தேவையான அளவுக்குத்தான் சாப்பிடும் என்பதால், தினமும் நாம் அளிக்கும் தீவனத்தில் மீன்கள் எவ்வளவு சாப்பிடுகின்றன, என்று தொடர்ந்து கவனித்து வந்தாலே எளிதாக மீன்களின் உணவுத் தேவையைக் கணித்து விடலாம்.

இதுபோல வளர்த்து வந்தால், மீன்களின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். ஆறு மாதத்திலேயே ஒரு மீன், ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ வரை எடை வந்து விடும். மீன்கள் ஒரளவுக்கு எடை வந்த பிறகு அறுவடை செய்து விற்பனை செய்யலாம். வளர்ப்பு விதங்களைச் சொல்லி முடித்த பிச்சை பிள்ளை, “போட்லா வகை மீன்கள் இயல்பாவே அதிக எடை வந்துடும். நாம இந்த மாதிரி வளக்குறப்போ ஆறு மாசத்துல ஒரு மீன் அதிகபட்சமா நாலு கிலோ வரைகூட எடை வருது. கட்லா ஆறு மாசத்துல இரண்டரை கிலோ வரை எடை வரும். புல்கெண்டை, மிர்கால் மாதிரியான மீன்கள் இரண்டு கிலோ வரை எடை வரும். சி.சி.சாதாக் கெண்டை மீன்கள் ஒன்றரை கிலோ வரையும், ரோகு அரைகிலோ எடை இருக்கும்.
33 சென்ட் நிலத்தில் 6 மாதங்களில் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் வரவ –செலவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
மீன்குஞ்சு
3,000

தீவனம்
6,000

சாணம்
2,000

உரங்கள்
1,000

மீன் மூலம் வரவு (700X85)

59,500
மொத்தம்
12,000
59,500
நிகர லாபம்

47.500
இரண்டு மாத வயதுள்ள குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்கிறப்போது இறப்பு விகிதம் குறைந்துவிடறதால் எண்பது சதவிகிதம் மீன்கள் வளர்ந்து வந்துவிடும். அதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த எல்லா  வகை கலந்து 1,200 குஞ்சுகள் விட்டோம்னா சராசரியாக  1,500 கிலோவுக்கு குறையாம அறுவடை பண்ண முடியும். சராசரியாக  கிலோ 70 ரூபாய்னு வியாபாரிங்க எடுத்துக்குறாங்க. ஆக, 1,05,000 ரூபாய்க்கு விற்பனை பண்ண முடியும். கரன்ட், தீவனம், பராமரிப்பெல்லாம் போக 75,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு :
பிச்சை பிள்ளை
அலைபேசி : 80985 – 54747
ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடுகள்


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy