Friday, February 11, 2011

தமிழகப் பண்டைய அளவை முறைகள்

தமிழகப் பண்டைய அளவை முறைகள்



 
பண்டைய தமிழகத்தில் ஏழு வகையான அளவை முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை பற்றி பண்டை நிகண்டுகளும் இலக்கிய நூல்களும் பேசுகின்றன. அவை;
1. எண்ணல்
ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணாகவோ வீசம், அரைக்கால், கால் என்ற இலக்கமாகவோ, அல்லது பதாதி சேனாமுகம், குமுதம் எனத் தொகையாகவோ எண்ணிக் கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும்.
2. நிறுத்தல்
குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாம் என படிக்கல் கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல் அளவை ஆகும்.
நிறுத்தல் அளவு
நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
  • மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு
  • பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு
  • உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு
  • பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு
  • கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.
  • தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.
பொன் முதலியவை நிறுக்கும் அளவு
4 நெல்லெடை = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பணவெடை
5 பணவெடை = 1 கழஞ்சு
8 பணவெடை = 1 வராகனெடை
4 கழஞ்சு = 1 கஃசு
4 கஃசு = 1 பலம்
பல்வகைப் பண்டங்கள் நிறுக்கும் அளவு
32 குன்றிமணி = 1 வராகனெடை
10 வராகனெடை = 1 பலம்
40 பலம் = 1 வீசை
100 பலம் = 1 கா
6 வீசை = 1 துலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்
3. முகத்தல்
பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும்.
முகத்தல் அளவு

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
(சில இடங்களில் உரியையும், வேறு சில இடங்களில் படியையும் நாழி என்கிறார்கள்)
4. பெய்தல்
நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும்.
பெய்தல் அளவு

360 நெல் = 1 செவிடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
5 மரக்கால் = 1 பறை
80 பறை = 1 கரிசை
48=96 படி = 1 கலம்
120 படி = 1 பொதி
1 படிக்கு
அவரை = 1,800
மிளகு = 12,800
நெல் = 14,400
பயறு = 14,800
அரிசி = 38,000
எள் = 1,15,000
5. நீட்டல்
விரல், சான், முழம் என நீளத்தை கை அல்லது கால்களால் அளப்பது நீட்டல் அளவை ஆகும்.
நீட்டல் அளவு

10 கோண் = 1 நுண்ணணு
10 நுண்ணணு = 1 அணு
8 அணு = 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் = 1 துசும்பு
8 துசும்பு = 1 மயிர்நுனி
8 மயிர்நுனி = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 சிறு கடுகு
8 சிறு கடுகு = 1 எள்
8 எள் = 1 நெல்
8 நெல் = 1 விரல்
12 விரல் = 1 சான்
2 சான் = 1 முழம்
4 முழம் = 1 பாகம்
6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
4 காதம் = 1 யோசனை
6. தெறித்தல்
நொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.
தெறிப்பு அளவு
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி - நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் (30 நாள்) = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் (12 மாதம்) = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
சிறுபொழுது
காலை - 6 முதல் 10 மணி வரை
நண்பகல் - 10 முதல் 2 மணி வரை
ஏற்பாடு - 2 முதல் 6 மணி வரை
மாலை - 6 முதல் 10 மணி வரை
இடையாமம் - 10 முதல் 2 மணி வரை
வைகறை - 2 முதல் 6 மணி வரை
பெரும்பொழுது
கார் - ஆவணி, புரட்டாசி
கூதிர் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனி - மார்கழி, தை
பின்பனி - மாசி, பங்குனி
இளவேனில் - சித்திரை, வைகாசி
முதுவேனில் - ஆனி, ஆடி
7. சார்த்தல்
சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும்.
நன்றி: முனைவர் தமிழப்பன் எழுதிய “தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்” எனும் நூலில் அட்டவணைப்பக்கம் 18 முதல் 21 வரையுள்ள சா.கணேசன் எழுதிய “தமிழகத்து அளவை முறை”


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

No comments:

Post a Comment